பிரபல ஹோட்டல் ஒன்றில் ரஷ்ய பெண்ணொருவருக்கு நேர்ந்த துயரம்!
#SriLanka
#Russia
Dhushanthini K
9 months ago

அஹுங்கல்லவில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் ரஷ்ய பெண்ணொருவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
41 வயதான ரஷ்ய பெண் ஒருவர் அஹுங்கல்லவில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் நவம்பர் 8ஆம் திகதி வந்து தங்கியிருந்தார். குறித்த பெண் கடந்த 12 ஆம் திகதி தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், விடுதியின் ஒதுக்கப்பட்ட அறையில் தூங்கச் சென்றாள்.
அப்போது, அவரது அறைக்கு வந்த ஒருவர், பலாத்காரம் செய்ததாக கூறினார். சம்பவம் தொடர்பில் பெண் அஹுங்கல்ல பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ளனர்.
குறித்த ஹோட்டல் ஊழியரான சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன



