மலையக அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக ஏற்பட்டுள்ள மாற்றம் : நாடாளுமன்றுக்கு தெரிவான பெண்கள்!
#SriLanka
Dhushanthini K
9 months ago

மலையக அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக மலையக சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்கள் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளரான கலைச்செல்வி 33,346 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
அதேவேளை, பதுளை மாவட்டத்திற்கான தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அம்பிகா சாமுவேல் 58,201 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த 1977ஆம் ஆண்டில் முதலாவது மலையக பிரதிநிதித்துவத்தைப் பெற்ற மலையக சமூகம் கடந்த 47 வருடங்களில் பெற்ற முதலாவது பெண் பிரதிநிதித்துவம் இது என்பது முக்கிய விடயம் ஆகும்.



