விசா இன்றி தங்கியிருந்த ரஷ்ய தம்பதியினர் கைது!
#SriLanka
Dhushanthini K
9 months ago

குடிவரவு குடியகழ்வு சட்டத்தை மீறி வீசா இன்றி தங்கியிருந்த ரஷ்ய தம்பதியரை கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
நேற்று (26.10) மாலை கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹந்தான பகுதியில் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 39 வயதுடையவர் எனவும் சந்தேகநபர் 32 வயதுடைய ரஷ்ய பிரஜை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டு ஜோடி கண்டி பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன், கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



