பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகருக்கு இடையில் சந்திப்பு!
#SriLanka
Thamilini
1 year ago
பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (23.10) இடம்பெற்றது.
பிரதமர் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், இலங்கையின் சமூக பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்துதல், சிறு மற்றும் நடுத்தர வர்த்தகங்களை மேம்படுத்துதல் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.