துருக்கியில் விமான நிறுவனத்தின் தலைமையகம் மீது தாக்குதல் : 05 பேர் பலி!

#SriLanka #Turkey
Thamilini
1 year ago
துருக்கியில் விமான நிறுவனத்தின் தலைமையகம் மீது தாக்குதல் : 05 பேர் பலி!

துருக்கியின் தலைநகர் அங்காராவிற்கு அருகில் உள்ள விமான நிறுவனத்தின் தலைமையகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 05 பேர் உயிரிழந்துள்ளதுடன் 22 பேர் காயமடைந்துள்ளனர். 

 ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் ஆகிய இருவர் தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது. 

 குர்திஷ் கிளர்ச்சிக் குழுவான PKK இந்த தாக்குதலில் பெருமளவில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 PKK என்பது துருக்கி, அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்ட ஒரு கிளர்ச்சிக் குழுவாகும். 

 எனினும், இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இறந்தவர்களில் நான்கு பேர் அதிகாரிகள் என்றும் மற்றவர் டாக்சி டிரைவர் என்றும் துருக்கி துணை ஜனாதிபதி கூறினார். 

 தாக்குதல் நடத்தியவர்கள் டாக்ஸி சாரதியின் கெப் வண்டியில் இருந்து தாக்குதல் நடத்த வந்ததாகவும், அதன் சாரதி அப்போது கொல்லப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

 விமான சேவை நிறுவனத்தின் தலைமையகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அது பணிமாற்றத்தின் போது இருந்த போதிலும், ஊழியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

 தாக்குதலில் காயமடைந்த 22 பேரில் விமான நிறுவனத்தின் சிறப்பு நடவடிக்கைப் படையைச் சேர்ந்த 7 பேர் அடங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4