டொனால்ட் ட்ரம்பின் அரசியல் பேரணியில் துப்பாக்கியுடன் கலந்துகொண்ட நபர் கைது!
#SriLanka
#world_news
#sri lanka tamil news
Dhushanthini K
6 months ago

டொனால்ட் டிரம்ப் அரசியல் பேரணிக்கு அருகில் சட்டவிரோதமாக இரண்டு துப்பாக்கிகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கலிபோர்னியாவில் டொனால்ட் ட்ரம்பின் அரசியல் பேரணிக்கு அருகில் பொலிஸாரால் நடத்தப்பட்ட பாதுகாப்பு சோதனைச் சாவடியில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து இரண்டு சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் போலி கடவுச்சீட்டு காணப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
49 வயதுடைய சந்தேகநபர் தொடர்பில் அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



