பிரான்ஸ், இத்தாலி உட்பட இஸ்ரேலுக்கு எதிராக திரும்பிய 40 நாடுகள்!

#SriLanka #world_news
Thamilini
1 year ago
பிரான்ஸ், இத்தாலி உட்பட இஸ்ரேலுக்கு எதிராக திரும்பிய 40 நாடுகள்!

லெபனானில் ஐ.நா அமைதிப்படையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டு இஸ்ரேலுக்கு எதிராக 40 நாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது. 

 ஐ.நா அமைதிப்படையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளதுடன், அவர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கும் இந்த 40 நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

 மத்திய கிழக்கில் போர் நெருக்கடி அதிகரித்துவரும் நிலையில், அமைதிப்படையினரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக தாங்கள் கருதுவதாக அந்த 40 நாடுகளும் தங்களின் கூட்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

 மேலும், ஐ.நா அமைதிப்படையினர் மீதான தாக்குதல் என்பது ஒருபோதும் ஏற்க முடியாது என்பதுடன், உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் உரிய முறைப்படி விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4