பிரான்ஸில் ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு!
#SriLanka
#France
Thamilini
1 year ago
பிரான்ஸில் ஈழத்தமிழ் இளைஞன் மர்மான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம், நெல்லியடி வதிரி இரும்புமதவடி பகுதியை சேர்ந்தவரும் பிரான்ஸில் வாழ்ந்து வந்த 28 வயதான யோகேஸ்வரன் சிந்துஜன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
ஐந்து வருடங்களுக்கு முன்னர் பிரான்ஸ் வந்த நிலையில், பணி புரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றையதினம் அவர் மர்மான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.