இனமத பேதத்தை தூண்டாமல் பெற்ற வெற்றிக்காக நன்றி: அனுரவிற்கு சுமந்திரன் வாழ்த்து
#SriLanka
#M. A. Sumanthiran
#Anuradapura
Mayoorikka
10 months ago

இனமத பேதத்தை தூண்டாமல் பெற்ற வெற்றிக்காக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமாரதிசநாயக்கவிற்கு நன்றி என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சமூக ஊடகபதிவில் தெரிவித்துள்ளார் .
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. இன, மத வெறிகளைத் தூண்டாமல் சிறப்பாக வெற்றி பெற்ற அனுரவிற்கு எமது வாழ்த்துக்கள்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆலோசனையை ஏற்று, மற்றைய வேட்பாளர்களை நிராகரித்து சஜித்துக்கு வாக்களித்து தேர்தல் வரைபடத்தில் ஒரு வித்தியாசத்தைக் காண்பித்த வட கிழக்கு தமிழ் மக்களுக்கும் எமது நன்றிகள்



