நாடளாவிய ரீதியில் 10 பேர் கைது!
#SriLanka
#sri lanka tamil news
Thamilini
1 year ago
தேர்தல் காலத்தில் பல சிறு சிறு சம்பவங்கள் பதிவாகி சுமார் 10 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் டிஐஜி சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டின் அண்மைக்கால வரலாற்றில் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்ற தேர்தல் இதுவாகும் என PAFRAL அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.
இம்முறை ஒரு வன்முறைச் சம்பவமே பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு வாக்குச் சீட்டுக் கிழிப்பு சம்பவங்களும், வாக்குச் சீட்டை வீடியோ பதிவு செய்த இரண்டு சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.