கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார் கெஹலிய!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று (11) பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று (12.09) கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகள் தொடர்பிலானது.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் உயர்நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.