இலங்கை வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் : சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
இலங்கை வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் : சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!

அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 இன்று (17.08) பிற்பகல் 1:00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு நாளை (18.08) பிற்பகல் 1:00 மணி வரை செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கன்ஹுராவ, நுவரெலியா மாவட்டங்களிலும் சில பகுதிகளில்150 மில்லிமீற்றர் மிக கனமழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக கூறப்படுகிறது. 

இடியுடன் கூடிய மழை  தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுக் கொள்கிறது. 

இதேவேளை, இலங்கையை அண்மித்துள்ள தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை காரணமாக, தீவின் தொலைதூர பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!