மல்லாவியில் பொலிஸாரின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக கண்டன போராட்டம்
#SriLanka
#Police
#Protest
#Abuse
#Mullaitivu
Prasu
1 year ago
வவுனிக்குளத்தில் படுகொலை செய்யப்பட்ட மல்லாவி இளைஞன் சஜீவனின் மரணத்திற்கான விசாரணையை செய்யாமல் காலத்தை இழுத்தடித்து பொலிசார் திட்டமிட்டு மூடி மறைக்க முற்படுவதாக குற்றம் சாட்டி மல்லாவி பொது அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டனப்போராட்டம் மல்லாவியில் பெருமளவிலான மக்கள் ஆதரவுடன் நடைபெற்றது.
ஏமது சமுக குற்றங்களுக்கு எதிராக போராடதான் வேண்டும் ஆனால் தமிழ் தேசிய போராட்டம் அதன் காரணமாக பலவீனப்படுத்தப்பட கூடாது இதேவேளை குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான செ.கஜேந்திரன், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எமக்கான அதிகாரம் மிக்க தேசம் இருந்தால் சமூக குற்றங்களுக்கு இடமிருக்காது.


