கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் சுவாமி தரிசனம் செய்தார் ரணில்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
11 months ago

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை இன்று (15) கையளித்த பின்னர் கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று தலதா இறைவனை தரிசனம் செய்தார்.
அதன் பின்னர் கண்டி அஸ்கிரி மற்றும் மல்வத்து மகா விகாரைகளுக்குச் சென்ற ஜனாதிபதி, மல்வத்து மகா விகாரையின் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கலாபிதான மகாநாயக்க தேரர் மற்றும் அஸ்கிரி மகா விகாரையின் அதிபதி வரகாகொட ஸ்ரீ ஞானரதன மகாநாயக்க தேரர் ஆகியோரின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்டு, பின்னர் சிறு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.



