திவுலபிட்டிய - நீர்கொழும்பு வீதியில் விபத்து : மூவர் பலி!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
திவுலபிட்டிய - நீர்கொழும்பு வீதியில் விபத்து : மூவர் பலி!

திவுலபிட்டிய - நீர்கொழும்பு வீதியில் துனகஹா சந்தி பகுதியில் இன்று (15.08) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.  

கொதிகமுவ - துனகஹா வீதியில் திவுலப்பிட்டி நோக்கி அதிவேகமாக பயணித்த முச்சக்கரவண்டியின் சாரதியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் திவுலப்பிட்டியிலிருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்துடன் முச்சக்கரவண்டி வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். . 

முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பலத்த காயம் அடைந்த ஒரு பெண்ணும் மற்றுமொரு ஆணும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அந்த நபரும் உயிரிழந்தார். 

உயிரிழந்தவர்கள் 30, 38 மற்றும் 45 வயதுடைய கொதிகமுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். குறித்த பெண் மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!