டொனால்ட் ட்ரம்பின் பிரசாரங்களை கைப்பற்றிய ஈரானிய ஹேக்கர்கள்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம் தொடர்பான உள்நாட்டில் பகிரப்பட்ட தகவல்களை ஈரானிய ஹேக்கர்கள் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொலிட்டிகோ என்ற அமெரிக்க செய்தி இணையதளம் இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
ட்ரம்பின் தேர்தல் பிரச்சாரம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் துணை அதிபர் வேட்பாளர் ஜே.டி.வான்ஸ் இ-மெயில் மூலம் நடத்திய விசாரணையில் இருந்து தகவல் கிடைத்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தலையிடும் நோக்கில் இந்த தகவல்கள் ஹேக் செய்யப்பட்டு பெறப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.