பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றன!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
இந்த ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது. 2024 ஒலிம்பிக் ஜூலை 26 அன்று தொடங்கி 15 நாட்களுக்கு மேல் நீடித்தது.
32 விளையாட்டுகள் தொடர்பான 329 போட்டிகள் நடைபெற்றன மற்றும் 10,714 வீரர்கள் பங்கேற்றனர்.
நேற்று ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 100 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டிகளின் இறுதிப் போட்டிகள் இடம்பெற்றது. இதில் ஆடவர் பிரிவில் முதலிடத்தை கனேடிய அணியும், பெண்களுக்கான போட்டியில் அமெரிக்காவும் முதலிடத்தை பெற்றுக்கொண்டன.
தங்கப் பதக்கப் பட்டியலில் சீனா முதலிடம் பிடித்து 39 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.
தங்கப் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா 38 தங்கப் பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலியா 18 தங்கப் பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.