பிரித்தானிய கலவரம் : நைஜீரியா விடுத்துள்ள எச்சரிக்கை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
பிரிட்டன் கலவரம் தொடர்பாக குடிமக்களுக்கு நைஜீரியா 'பயண எச்சரிக்கை' விடுத்துள்ளது கலவரம் காரணமாக பல நாடுகள் இங்கிலாந்தில் உள்ள தங்கள் குடிமக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளன.
நைஜீரியா, மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள், இங்கிலாந்தில் வசிப்பவர்கள் அல்லது வருகை தருபவர்கள் ஆர்ப்பாட்டங்களில் இருந்து விலகி இருக்குமாறு எச்சரிக்கைகளை அனுப்பியுள்ளன.
மூன்று நாடுகளிலும் பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் வசிக்கின்ற நிலையில், அவர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் சமீபத்திய கலவரங்களால் வன்முறை மற்றும் சீர்குலைவு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே