லெபனானில் இருந்து நாட்டு மக்களை வெளியேறுமாறு அமெரிக்கா, இங்கிலாந்து அறிவுறுத்தல்

#America #people #Warning #England #Lebanon
Prasu
1 year ago
லெபனானில் இருந்து நாட்டு மக்களை வெளியேறுமாறு அமெரிக்கா, இங்கிலாந்து அறிவுறுத்தல்

காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாகவும் இஸ்ரேல் அண்டை நாடான லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

ஹிஸ்புல்லா அமைப்பை ஈரான் பின்புறத்தில் இருந்து இயக்கி வருகிறது. இந்த வார தொடக்கத்தில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரான் நாட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். 

இந்த படுகொலைக்கு இஸ்ரேல்தான் காரணம் என ஈரான் நம்புகிறது. இதனால் இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த ஈரான் உயர் அதிகாரம் படைத்த தலைவர் அயதுல்லா அலி காமேனி உத்தரவிட்டுள்ளார். 

மேலும் இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா கமாண்டர் கொல்லப்பட்டுள்ளார். இதனால் ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது பயங்கரமான தாக்குதலை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனால் போர் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த போர் கிழக்கு மத்திய பகுதியில் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் லெபனானில் வசிக்கும் அமெரிக்க மக்கள், இங்கிலாந்து மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளிறும்படி இருநாட்டு தூதரகங்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் எந்தவொரு விமானம் கிடைத்தாலும் டிக்கெட் புக் செய்து லெபனானில் இருந்து வெளியேறும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

"லெபனானில் இருந்து புறப்பட விரும்புபவர்கள், அந்த விமானம் உடனடியாகப் புறப்படாவிட்டாலும் அல்லது அவர்களின் முதல் விருப்ப வழியைப் பின்பற்றாவிட்டாலும் அவர்களுக்குக் கிடைக்கும் டிக்கெட்டை முன்பதிவு செய்யுமாறு நாங்கள் ஊக்குவிக்கிறோம்" என லெபனான் பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

 இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் அமெரிக்கா போர்க்கப்பலை அனுப்பியுள்ளது. அதிகமான வீரர்களையும் மத்திய கிழக்குப் பகுதியில் குவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4