லெபனானில் உள்ள பிரித்தானியர்களை உடனடியாக வெளியேறுமாறு எச்சரிக்கை

#Warning #Britain #citizen #Lebanon
Prasu
1 year ago
லெபனானில் உள்ள பிரித்தானியர்களை உடனடியாக வெளியேறுமாறு எச்சரிக்கை

இஸ்ரேல் நாட்டுடனான பதற்றம் எந்நேரமும் மோசமாக கூடும் என்று லெபனான் நாட்டிலிருக்கும் பிரித்தானியர்கள் உடனடியாக அந்நாட்டைவிட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் தரைவழி மற்றும் வான்வழித் தாக்குதல் அவ்வப்போது நடந்துவருவதாகவும், நிலைமை எப்போது வேண்டுமானாலும் மோசமாகலாம் என்று பிரித்தானிய வெளியுறவுச் செயலரான David Lammy தெரிவித்துள்ளார்.

சுமார் 16,000 பிரித்தானிய பிரஜைகள் இப்பகுதியில் உள்ளனர், அனைத்து வகையான சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளும் வகையில் தயாராக இருக்குமாறு வெளியுறவு அலுவலக தூதரக் குழுவினரைக் கேட்டுக்கொண்டுள்ளதாக பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4