புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தும் ருவாண்டா திட்டம் இடைநிறுத்தம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்துவதற்கான திட்டத்தை பிரித்தானியாவின் புதிய பிரதமர் இடைநிறுத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கமைவாக புதி திட்டம் ஒன்று வகுக்கப்படும் வரை ருவாண்டா திட்டம் இடைநிறுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தேர்தல் பிரச்சார காலப்பகுதியில் கன்சர்வேட்டிவ் அரசாங்கத்தின் கீழ் ருவாண்டாவிற்கு அனுப்ப முற்பட்ட சில புகலிடக்கோரிக்கையாளர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இறுதியாக இரு புகலிடக்கோரிக்கையாளர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



