பேருந்து கட்டணத் திருத்தம் நடைமுறைப்படுத்த வேண்டும் - இல்லையெனில் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்!!
ஆண்டுதோறும் அமலுக்கு வரும் பேருந்துக் கட்டணத் திருத்தம் நாளை (01) முதல் செயல்படுத்தப்பட வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பேருந்துக் கட்டணத் திருத்தக் கொள்கையின்படி, இந்த ஆண்டு பேருந்துக் கட்டணத்தை எவ்வாறு திருத்த வேண்டும் என்பது குறித்து தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஜெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இது தொடர்பாக பேருந்து சங்கங்களுடன் எந்த கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என பேருந்து சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.
இருப்பினும், இந்த ஆண்டு பேருந்துக் கட்டணத் திருத்தத்தில் எதிர்பார்க்கப்படும் கட்டணத் திருத்தம் நடைபெறாவிட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே