பொது வேட்பாளர் விடயம் தொடர்பில் ஜெய்சங்கருடன் தமிழரசு கட்சியினர் கலந்துரையாடல்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் தலைவர்களுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கும் இடையில் நேற்று (21.06) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் தமிழ்த் தலைவர்களான சி.வி. விக்னேஸ்வரன், செல்வராஜா கஜேந்திரன், தர்மலிங்கம் சித்தத்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக தமிழர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த விடயத்தில் இன்னும் முழுமையான உடன்பாடு எட்டப்படாத நிலையில், கட்சிகளுக்குள் நிலவும் போட்டி மனப்பான்மை, மற்றும் ஒற்றுமையின்மை காரணமாக கட்சி பிளவுபட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.