ஆட்சிக்கு வந்தவுடன் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவேன் : சஜித் உறுதி!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

ஆட்சிக்கு வந்தவுடன் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சக்வல நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி பாரதி வித்தியாலயத்திற்கு நட்புறவு வகுப்பறையொன்றை அன்பளிப்பு செய்யும் நிகழ்வில் இன்று (09.06) அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து பேசிய அவர், நீங்கள் சிங்களவராக இருந்தாலும், தமிழராக இருந்தாலும், பர்கர்களாக இருந்தாலும், முஸ்லிம்களாக இருந்தாலும், நாட்டைக் கட்டியெழுப்ப ஒரே தாயின் பிள்ளைகளாக கைகோர்யுங்கள்.
13வது திருத்தம் குறித்து பேசும் போது பல்வேறு தலைவர்கள் பயப்படுவதாகவும் அவர்கள் அரசியல் சந்தர்ப்பவாதிகளாக இருந்தாலும் 13வது திருத்தத்தை நேருக்கு நேர் பேசுபவராகவே அமுல்படுத்துவேன் எனத் தெரிவித்துள்ளார்.



