உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கல்விப் பொதுச் சான்றிதழ் ஏ லெவல் தேர்வு கடந்த ஜனவரி 4-ஆம் திகதி முதல் 31-ஆம் திகதி வரை நடைபெற்றது.
அதன்படி, பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தேவையான பணிகளை பரீட்சை திணைக்களம் தற்போது மேற்கொண்டு வருவதாக கல்வி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
346,976 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



