வவுனியாவில் பாரம்பரிய பறை இசையுடன் நுங்கு திருவிழா கொண்டாட்டம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

வவுனியா மருக்காரம்பளையில் தமிழரின் பாரம்பரிய பறை இசையுடன் நுங்கு திருவிழா இன்று (12.05) இடம் பெற்றிருந்தது.
இதன்போது பனை மரத்தின் பயன்கள் தொடர்பாகவ விளக்கமளிக்கப்பட்டதுடன், பனை மரத்தின் உற்பத்தி பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
மேலும் கலை நிலா கலையகத்தினால் குளக்கரையை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் நாடக ஆற்றுககையும் இடம் பெற்றிருந்தது.
சுயாதீன இளைஞர்களினால் தொடர்ச்சியாக ஐந்தாவது வருடமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்ற குறித்த நிகழ்வில் பெருமளான இளைஞர்கள் யுவதிகள் என பலரும் கலந்து கொண்டு நுங்குகளை பருகி மகிழ்ந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.



