பிரான்ஸில் காவல் துறையினர் மீது துப்பாக்கி பிரயோகம் : இரு பொலிஸாருக்கு நேர்ந்த கதி!
#France
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
பரிஸ் 13 ஆம் வட்டாரத்தில் காவல்துறையினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
இதில் இரு காவல்துறையினர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வன்முறைச் சம்பவம் ஒன்றுக்காக கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் குறித்த நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கிருந்த ஆயுதம் ஒன்றை எடுத்த அவர், பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இதில் இரு காவல்துறையினர் படுகாயமடைந்தனர். தாக்குதலை மேற்கொண்டவரும் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.