மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவை சந்தித்தார் ஜுலி சாங்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிற்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு நேற்று (10.05) அமெரிக்க தூதரகத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் X சமூக மையத்தில் குறிப்பை வெளியிட்ட அமெரிக்க தூதர், இருதரப்பு உறவுகள், கடன் மறுசீரமைப்பு மற்றும் நடந்து கொண்டிருக்கும் சீர்திருத்தங்கள் குறித்து இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டதாக கூறினார்.
இலங்கைக்கு வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலாலுக்கு தெரிவித்ததாக திருமதி ஜூலி சாங் கூறினார்.