வீதிகளில் விளையாடும் கும்பலால் பொதுப்போக்குவரத்துக்கு இடையூறு : நடவடிக்கை எடுக்கப்படுமா?

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
வீதிகளில் விளையாடும் கும்பலால் பொதுப்போக்குவரத்துக்கு இடையூறு : நடவடிக்கை எடுக்கப்படுமா?

மைதானத்தில் விளையாட வேண்டிய விளையாட்டுக்களை பொதுப்போக்குவரத்து வீதியில் சட்டவிரோதமாக சிலர் குழுவாக கூடி விளையாடுவதை அன்றாட நடவடிக்கையாக கொண்டிருக்கின்றார்கள்.  

காலை முதல் மாலை வரை பல்வேறு பகுதிகளில் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்கதையாகி வருகின்றன.  

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட பல வீதிகளிலும் கிரிக்கட் கால்பந்து பல்வேறு விளையாட்டுக்களை சிறுவர்கள் முதல் வயது வந்த பெரியோர்கள் வரை விளையாடி வருகின்றார்கள்.  

images/content-image/1714881304.jpg

ஆனால் இவ்வாறு விளையாடுபவர்களுக்கு பொதுப்போக்குவரத்தினை இடையூறு செய்வது தெரியாத விடயமல்ல.  

இன்று அம்பாறை மாவட்டத்தின் முக்கிய வீதிகளில் இவ்வாறான சட்டவிரோத விளையாட்டுக்கள் இடம்பெறுவதும் பின்னர் பிரச்சினைகளால் நிறுத்தப்படுவதும் தொடர்கதையாகவே உள்ளன.  

எனவே இவ்வாறான வீதி விளையாட்டுக்களை கட்டுப்படுத்த நாம் அனைவரும் முன்வர வேண்டும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!