கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் : தீவிர விசாரணையில் அதிகாரிகள்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

கட்டுநாயக்க விமான நிலையத்தின் விஐபி முனையத்திற்கு அருகில் விமானப்படை வீரர் ஒருவர் தற்செயலாக துப்பாக்கிச் சூடு நடத்தியமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இன்று (30.04) காலை 10 மணிக்கும் 11 மணிக்கும் இடையில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
விமானப்படையினர் தண்ணீர் குடிக்க ஓய்வு பகுதிக்குச் சென்றதாகவும், அவரது துப்பாக்கி தரையில் விழுந்ததாகவும், தோட்டா வெடித்ததாகவும் சம்பந்தப்பட்ட நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.



