பன்னிபிட்டியவில் மரம் அறுக்கும் ஆலையில் தீ பரவல்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
பன்னிபிட்டிய, லியனகொட பிரதேசத்தில் உள்ள மரம் அறுக்கும் ஆலையில் தீ பரவியதால், மரம் அறுக்கும் ஆலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
இன்று (22.04) அதிகாலை 2.30 மணியளவில் தீ பரவியதுடன், பிரதேசவாசிகள் மற்றும் கோட்டே நகரசபையின் மூன்று தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தெஹிவளை நகரசபையின் நீர் பீரங்கிகளின் மூலம் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை மற்றும் சொத்துக்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.