வவுனியாவில் அமைதிக்கான ஆன்மீக நடைபயணம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
உலக அமைதிக்கான ஆன்மீக நடை பயணம் வவுனியாவில் ஸ்ரீ சத்திய சாயி சர்வதேச நிறுவனம் இலங்கை மற்றும் வவுனியா சத்திய சாயி நிலையத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்றிருந்தது.
வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள சத்திய சாயி நிலையத்தின் விசேட வழிபாடுகள் இடம் பெற்றதன் பின்னர் அமைதிக்கான ஆன்மீக நடை பயணம் ஆரம்பமான நிலையில், மீண்டும் மீண்டும் சத்திய சாயி நிலையத்தை நடைபயணம் வந்தடைந்திருந்தது.
இதில் சிறுவர்கள், வயதானவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்தும் கொண்டிருந்ததோடு தங்க நிறத்திலான தேரில் சத்திய சாய்பாபாவின் படம் தாங்கி இழுத்துச்செல்லப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.