போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்பு : இரு பொலிஸார் கைது!
#SriLanka
#Arrest
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த சந்தேகத்தின் பேரில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இவர் மாவத்தகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் டொருட்டியாவ பொபேலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய சார்ஜன்ட் ஆவார்.
இவர்கள் நேற்று (18.04) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.