3 நாட்களில் 15,675 சுற்றுலாப்பயணிகள் வருகை
#SriLanka
#Tourist
Mayoorikka
2 years ago
இந்த மாதத்தின் கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் 15,675 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர். சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இந்தியாவில் இருந்து வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, இந்தியாவில் இருந்து 2,349 பேரும், ரஷ்யாவில் இருந்து 1,882 பேரும் ஜேர்மனியில் இருந்து 1,438 பேரும் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர்.