13 விவகாரம்: சகல கட்சிகளுடன் பேசவேண்டும்! ஜனாதிபதி அறிவிப்பு
#SriLanka
#Ranil wickremesinghe
Mayoorikka
1 year ago

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக சகல கட்சிகளுடன் பேசவேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக தமிழ்க் கட்சிகளின் எம்.பி.க்களுடன் மட்டும் கலந்துரையாடுவது போதுமானதல்ல என்றும் இது நாடு முழுவதும் அமுல்படுத்தும் விடயம் என்பதால் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வகட்சி மாநாட்டில் தெரிவித்தார்.



