கெஹலியவின் கோரிக்கை மீண்டும் நிராகரிக்கப்பட்டது!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் பிணை மீளாய்வு மனு மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனு இன்று (03.040 கொழும்ப மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஷங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்தமை தொடர்பிலான வழக்கு விசாரணை முடிவடையும் வரையில் கெஹலிய ரம்புக்வெல்லவை பிணையில் விடுவிக்க மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் மறுத்ததை அடுத்து அவர் இந்த பிணை விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.