கிழக்கு கடலில் குறுகிய தூர ஏவுகணைகளை வீசி பரிசோதனை செய்த வடகொரியா!
#SriLanka
#NorthKorea
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

வடகொரியா பியோங்யாங்கில் இருந்து கிழக்கு கடலை நோக்கி பல குறுகிய தூர ஏவுகணைகளை ஏவியுள்ளது.
தென்கொரியாவின் சியோல் நகருக்கு அமெரிக்க இராஜாங்க செயலாளர் அந்தோனி பிளிங்கன் வந்தடைந்த போது இந்த ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சியோலில் நடைபெறும் மாநாட்டில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பங்கேற்க உள்ளார்.
எவ்வாறாயினும், வடகொரியா ஏவப்பட்ட ஏவுகணைகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தென்கொரியாவின் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.



