ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அழுத்தம் கொடுப்பதாக குற்றச்சாட்டு!
#SriLanka
#Ranil wickremesinghe
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அழுத்தம் கொடுப்பதாக அறியமுடிகிறது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலில் அரசியல் ரீதியில் அபாயகரமான விளைவுகள் ஏற்படும் என்பதால் அவர்கள் மேற்படி அழுத்தம் கொடுப்பதாக அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், இவ்வாறான சதித்திட்டங்கள் மூலம் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை சீர்குலைப்பது முற்றிலும் சாத்தியமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.