ஏடன் வளைகுடா பகுதியில் சென்ற வணிக கப்பல் மீது தாக்குதல் : 21 பேர் காயம்!
#SriLanka
#world_news
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

ஏமன் நாட்டின் ஏடன் துறைமுகத்தில் ஏடன் வளைகுடா பகுதியில் சென்று கொண்டிருந்த வணிகக் கப்பலின் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் 21 பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களை இந்திய கடற்படையினர் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐஎன்எஸ் கொல்கத்தா கப்பல், ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் மூலம் அந்த குழுவினர் மீட்கப்பட்டதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.



