இலங்கையில் கிளௌகோமா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
இலங்கை சனத்தொகையில் சுமார் 5 வீதமானோர் கிளௌகோமா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
குருட்டுத்தன்மைக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இந்த நோய் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, கண் பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்படுவது மிகவும் முக்கியம் எனவும், கொள்கையளவில், நம் நாட்டில் கண் நோய்களைத் தடுப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.