ரயில்வே பொறியியலாளர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
#SriLanka
#Protest
#Railway
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

ரயில்வே பொறியியலாளர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டமானது தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது நேற்று (05.03) நள்ளிரவு முதல் முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்தது.
லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் இன்ஜினியர்கள், ரயில்வே காவலர்கள் மற்றும் ரயில்வே மேற்பார்வை மேலாளர்கள் ஆகியோரின் தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளவிருந்தன.
மேற்படி அலுவல்களின் சம்பளத்தை குறைக்கும் வகையில் அமைச்சரவை பத்திரம் சமர்பிக்கப்படவிருந்த நிலையில் அதனை மாற்றியமைக்குமாறு கோரியே அவர்கள் போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த போராட்டமானது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.



