செங்கடலில் ஹூதி கிளர்ச்சியாளர்களால் தாக்கப்பட்ட கப்பல் மூழ்கிவருவதாக அறிவிப்பு!
#SriLanka
#world_news
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

கடந்த வார இறுதியில் யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் பிரித்தானியாவுக்குச் சொந்தமான ரூபிமா என்ற கப்பல் உரம் ஏற்றி மூழ்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பிரித்தானிய கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம் என தெரிவித்துள்ளனர்.
யேமனின் ஒரு பெரிய பகுதியில் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தாலும், ஈரான், சிரியா மற்றும் வட கொரியா போன்ற சில நாடுகள் மட்டுமே சர்வதேச அளவில் ஹூதி கிளர்ச்சியாளர்களை ஏற்றுக்கொள்கின்றன.
பிப்ரவரி 18 அன்று ரூபிமா என்ற கப்பல் ஹூதி கிளர்ச்சியாளர்களால் தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



