காலி, நாகொட பகுதியில் பொலிஸ் அதிகாரியின் வீட்டில் துப்பாக்கிச்சூடு!
#SriLanka
#GunShoot
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

காலி, நாகொட வலகும்புர பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று நேற்று (02.03) பிற்பகல் பதிவாகியுள்ளது.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியின் வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்த இருவர், துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன், அவருடைய மடிக்கணினி மற்றும் கைத்தொலைபேசியை எடுத்துக்கொண்டு வானில் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



