புதிய கூட்டணியுடன் மைத்திரி தலைமையில் உருவாகவுள்ள புதிய கட்சி!
#SriLanka
#Maithripala Sirisena
#SLPP
Mayoorikka
2 years ago
இவ் வருட இறுதியில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தலுக்கான தயார்ப்படுத்தல்களில் பிரதான கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
குறிப்பாக, தேர்தல் கூட்டணிகள் தொடர்பில் பல்வேறு கட்சிகளும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான புதிய கூட்டணி அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம்(01) இடம்பெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.