மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க தேரர்கள் அதிரடி நடவடிக்கை!
#SriLanka
#Crime
#Myanmar
Mayoorikka
2 years ago
மியன்மாரில் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க மகாநாயக்க தேரர்கள் முயற்சி எடுத்துள்ளனர்.
அந்த வகையில், இலங்கை மகாநாயக்க தேரர்களால் தயாரிக்கப்பட்ட மகஜர் ஒன்று மியன்மார் மகாநாயக்க தேரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார தெரிவித்துள்ளார்.
குறித்த மகஜருக்கு அமைய, மியன்மார் மகாநாயக்க தேரரின் ஊடாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண மியன்மார் அரசாங்கம் தலையிடும் என எதிர்ப்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.