மஹரகம பகுதியில் கட்டடம் இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் உயிரிழப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹைலெவல் வீதிக்கு அருகில் உள்ள கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தொழிலாளர்களின் மீது கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சுவரில் விழுந்து காயமடைந்த ஊழியர்கள் இருவரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விபத்தில் 45 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக களுபோவில வைத்தியசாலை பிரிவு தெரிவித்துள்ளார்.
காயமடைந்த மற்றைய நபர் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.