இன்று தொடக்கம் ஈபிள் கோபுரம் பணியாளர்களின் வேலை நிறுத்தத்தால் மூடப்படும்

#France #strike #France Tamil News #Workers #Tower
Mugunthan Mugunthan
2 months ago
இன்று தொடக்கம் ஈபிள் கோபுரம் பணியாளர்களின் வேலை நிறுத்தத்தால் மூடப்படும்

ஈஃபிள் கோபுரத்தை பராமரிக்கும் SETE அமைப்பு ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் இன்று பெப்ரவரி 19 ஆம் திகதி திங்கட்கிழமை காலை முதல் ஈஃபிள் கோபுரம் மூடப்பட்டுள்ளது.

 இன்று காலை இடம்பெற்ற பொதுக்கூட்டத்தினை முடித்துக்கொண்டு அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஈஃபிள் கோபுரத்தின் மேல் தளங்கள் மூடப்பட்டுள்ளன. 

ஆனால் அதன்  முற்றவெளி பகுதிகளை இலவசமாக பயன்படுத்த முடியும் என்றும்முன்பதிவு செய்துள்ளவர்கள் தங்களுடைய முழுமையான தொகையினை மீளப்பெற முடியும் அல்லது திகதியை பிற்போட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.