நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் பிரேரணைக்கு மைத்திரி ஆதரவு!
#SriLanka
#Maithripala Sirisena
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் பிரேரணைக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான பிரேரணை ஒன்றை கொண்டு வருவதற்கான ஆயத்தம் இடம்பெற்றுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட “சுதந்திரத்துக்கான அபி” என்ற மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், நிறைவேற்று ஜனாதிபதி பதவியை இல்லாதொழிப்பதற்கு இது சரியான தருணம் அல்ல என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.



