நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் வரிக் கோப்புகளைத் தயாரிப்பது நடைமுறைச் சாத்தியமற்றது - சம்பிக்க!

#SriLanka #Champika Ranawaka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் வரிக் கோப்புகளைத் தயாரிப்பது நடைமுறைச் சாத்தியமற்றது - சம்பிக்க!

நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் வரிக் கோப்புகளைத் தயாரிப்பது நடைமுறைச் சாத்தியமற்றது என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.  

அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஒரு கோப்பை செயலாக்க அரை மணி நேரம் ஆகும். வரிக் கோப்புகளை செயலாக்க 9 அதிகாரிகள் உள்ளனர். அதன்படி, ஒரு நாளைக்கு செயலாக்கப்படும் கோப்புகளின் எண்ணிக்கை 144 ஆகும். அதன்படி, ஒரு கோடியே அறுபது லட்சம் கோப்புகளை செயலாக்க நீண்ட காலம் எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், வரிக் கோப்புகளை அனைவருக்கும் திறப்பது நடைமுறையில் இல்லை. வரி செலுத்தத் தவறிய 1272 பேரிடம் இருந்து உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வரி வசூலிக்க வேண்டும். ஆனால் அதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

ஒவ்வொரு தனிநபருக்கும் புதிய வரிக் கோப்புகளைத் திறக்கும் முன், செலுத்தப்படாத வரிகளை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான முறையான வேலைத்திட்டம் தற்போதைய அரசிடம் இல்லை. இதனால், மக்கள் ஒடுக்கப்பட்டு, நடைமுறைக்கு மாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

நவீன தொழில்நுட்பத்தினூடாக மக்களின் கொடுக்கல் வாங்கல்களை துல்லியமாக கண்காணிக்க முடியும் . அதற்கு QR குறியீடுகளைப் பயன்படுத்தலாம். எரிபொருளுக்கான குறியீட்டை அறிமுகப்படுத்தியது வெற்றிகரமாக இருந்தது. அதன்படி, எரிபொருள், மின்சாரம், தண்ணீர் கட்டணங்களுக்கு மக்கள் க்யூஆர் குறியீடுகளை பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அதன் கீழ், பரிவர்த்தனைகள் மற்றும் அவற்றின் மதிப்புகள் பற்றிய துல்லியமான தரவுகளைப் பெற முடியும். வரி வசூல் சம்பிரதாயமான சூழ்நிலையை உருவாக்க உதவும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!