வவுனியாவில் ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பினால் வழங்கப்பட்ட 112வது இல்லம்

பொருட்களின் விலை உயர்வின் நிமித்தம் நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வாழ்வதற்கே வழியின்றி தவிக்கின்ற போதிலும் ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது இப் புதிய ஆண்டிலும் தன்னுடைய உன்னதமான பணிகளை சிறப்பாக செய்து வருகின்றது.
விசேடமாக நிரந்தர வீடின்றி அல்லலுறுகின்ற மக்களிற்கு நிரந்தர வீடுகளை நிர்மாணித்து கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் 01.02.2024 அன்று ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 112ஆவது இல்லமும் ரெகோபோத் ஊழியங்களின் 01ஆவது இல்லமும் பயன்பெறும் குடும்பத்தினரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ் இல்மானது வவுனியா பனிக்காநீரவி பகுதியில் பல்வேறான இன்னல்களுடன் வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த குடும்பத்திற்கே வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிதி உதவியை The Apostolic Church Denmark மற்றும் Rehoboth Ministries Denmark ஆகியவற்றின் ஸ்தாபகர் Pastor Francis Anthonipillai மற்றும் Lilly Jeyaseely அவர்கள் வழங்கியுள்ளார்கள்.
இவ் மகத்தான உதவியினை நல்கிய Pastor & Sister ஆகியோருக்கு எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அத்தோடு கூட தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்கின்றதால் ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.
நன்றி
JEEVAOOTRU trust



